திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டார வளர்ச்சித்துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்த வெண்ணிலா, காங்கேயம் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், குண்டடம் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி விஜயன், உடுமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.