திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரட்டுமடம் பகுதியில் நடைபெற்ற கறிக்கோழி உற்பத்தி நிறுத்தம் சம்பந்தமான விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கறிக்கோழி வளர்ப்பில் இருதரப்பு ஒப்பந்தம் அவசியம் என்றும், ஒப்பந்தப் படிவங்களில் உள்ள சரத்துக்கள் விவசாயிகளுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ. 20 விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.