திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறுகின்றது. பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தற்காலிக கடைகள் அமைக்க கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் 1 கோடியே 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டதாக வட்டாட்சியர் கௌரிசங்கர் தெரிவித்தார். இந்தத் தொகை அதிகமாக உள்ளதாக கருதி, குறைக்க வேண்டும் என கேட்டார். கோட்டாட்சியரிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும் என வட்டாட்சியர் கூறி, ஏலத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.