திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கர்நாடகாவில் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளில் கலந்துகொண்டு அருவிகள் மாதிரி தயாரிப்பு, போஸ்டர் தயாரிப்பு மற்றும் வினா விடை போட்டிகளில் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தினர். ஆசிரியர் பாரத் குமார் மாணவர்களுக்கு வழிகாட்டினார். தலைமை ஆசிரியர்கள் பழனிச்சாமி மற்றும் மாரியப்பன் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டினர்.