இதற்கிடையில் கல்லாபுரம் அருகே மாவளபுரம் அரிசி ஆலை அருகில் ஆபத்தான வளைவு பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் குறுக்கே வந்த காரணத்தால் வேகமாக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ஆடுகள் மீது மோதாமல் இருக்க முயற்சி செய்து பொழுது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் காயம் அடைந்த நிலையில் இரண்டு பேர் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு கிரேன் மூலம் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து மீட்கப்பட்டது. உடுமலை அருகே ஆபத்தான வளைவு பகுதியில் ஆடுகள் குறுக்கே சென்றதால் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்தில் பயணம் செய்த எட்டு பேர் காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.