திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடந்து வருகின்றது. தற்சமயம் அதிக அளவு விவசாயிகள் வியாபாரிகள் பங்கேற்பதால் கூடுதல் விலை கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை தோறும் உரித்த தேங்காய் ஏலம் இ நாம் திட்டத்தின் கீழ் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.