இந்த நிலையில் அமராவதி அணையின் மொத்த 90 அடியில் தற்பொழுது 85.11 அடியாக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அமராவதி ஆற்றில் எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்து விடப்படலாம்.
எனவே அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள கல்லாபுரம் ருத்ராபாளையம் கொழுமம் குமரலிங்கம் மடத்துக்குளம் கணியூர் காரத்தொழவு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை சார்பில் தற்பொழுது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.