திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிறந்தநாள் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர் ராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.