திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அடிவெள்ளி, மூங்கில் தொழுவு, வீரம்பட்டி, கொங்கல் நகரம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் பல மணி நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.