இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏழை எளிய மக்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து பிரதானமாக உள்ளது. பல்வேறு பணிகளுக்கு செல்வதற்காக இன்று பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்தோம். மாலை பொள்ளாச்சியில் இருந்து வருகை தந்த அரசு பஸ்ஸை போதை ஆசாமி தடுத்து நிறுத்தி நகர விடாமல் சிறைபிடித்தார். இதே போன்று எங்கள் பகுதிக்கு வந்த மற்றொரு பேருந்தையும் வழிமறித்துக் கொண்டார். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பணிக்கு சென்ற பொதுமக்களும் ஊருக்கு திரும்பி வருவதற்கு உடுமலை மற்றும் பொள்ளாச்சியில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே சின்ன வாளவாடி பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட ஆசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.