நிகழ்வில் மறைந்த விஜய்காந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேமுதிக தொண்டர்கள் மொட்டை அடித்து திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பெரியகோட்டை ஊராட்சி ராஜகாளியம்மன் கோவில் பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையம் பைபாஸ் ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்தில் ஊர்வலம் நிறைவு அடைந்தது.
அவைத்தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், துணைச்செயலாளர் கந்தசாமி, சந்திரகாந்தி, நகரச் செயலாளர் ராமச்சந்திரன், நகர அவைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் யூசுப், துணைச் செயலாளர் இப்ராஹிம் தாஜுதீன், உடுமலை ஒன்றிய அவைத் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் தமிழ் மாநில காங்கிரஸ் மதிமுக நாம் தமிழர் கட்சி அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகம் விடுதலை சிறுத்தைகள் ஐ என் டி யு சி முஸ்லிம் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.