உடுமலையில் தவெகவினர் கட்சியினர் கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திர ரோடு பகுதியில் பள்ளி அருகே செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடை தமிழக அரசு உத்தரவுப்படி மூடப்பட்டதை அடுத்து, திருப்பூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் திருமலை அறிவுறுத்தலின்படி, உடுமலை நகர செயலாளர் அபுதாஹிர் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் காஜா மைதீன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் பிரகாஷ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி