திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பிற்பட்ட வகுப்பினர் வசிக்கும் வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் துணிக்கடைகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் இந்த பகுதியில் இருந்த பழைய வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் கரும்புகை ஏற்பட்டது. உடனே தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பயன்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து உடுமலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.