சின்னவீரன்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்னவீரன்பட்டி ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. அருளானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, கலாவதி கலந்து கொண்டார். ஒன்றிய பொறியாளர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள நிர்ணய செயலி மூலம் தேசிய ஊரக உருவி தீர்க்க செயல்பாடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டது. 

இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், மாவட்ட வன அலுவலர் தனலட்சுமி, ஊராட்சி செயலாளர் மாரிமுத்து, கிராம வளர் பயிற்றுநர்கள், வட்டார வளர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி