திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜனவரி 3) சீர்மரபினர் நல வாரிய பதிவு செய்யும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். முகாமில் சீர்மரபினர் நலவாரியத்தில் புதிய பதிவு செய்யலாம். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் முகாம் வரும் 10, 24, 31 ஆம் தேதிகளிலும் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.