திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்னவீரன்பட்டி நாகராஜன் என்பவர் வீட்டில் 15 பவுன் நகையும், வெற்றி அவென்யூ குடியிருப்பில் விக்ரம் என்பவரின் வீட்டில் 1 பவுன் நகை மற்றும் 5000 ரூபாய் பணம் மற்றும் அதே போல சீனிவாசபிரபு என்பவரின் வீட்டில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 5000 திருடப்பட்டுள்ளது. ஒரே நாளில் சின்னவீரன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.