உடுமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனை பழைய கட்டிடம் தரைத்தளத்தில் செயல்படும் ஆய்வகப் பிரிவில் காலை 8 மணிக்கு வர வேண்டிய அலுவலர்கள் தற்போது 8.30 ஆகியும் வரவில்லை. ஏராளமான நோயாளிகள் ரத்தப் பரிசோதனைக்குக் கொடுப்பதற்கும், ரிசல்ட் வாங்குவதற்கும் காலை 7.30 இருந்தே நிற்கவும் நடக்கவும் முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளனர். 

சரியான நேரத்திற்கு வர வேண்டியவர்கள் தாமதமாக வருவதால் கூட்டநெரிசல் அதிகமாக உள்ளது. காலை நேரம் நோயாளிகள் கூட்டநெரிசலில் நீண்டு நின்று கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது நேரம் 8.30 இதுவரையும் ஆய்வக ஊழியர்கள் வரவில்லை. எனவே காலதாமதமாக வரும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடுமலை ஒன்றிய கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்

தொடர்புடைய செய்தி