திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் 5 லட்சத்து 44 ஆயிரம் கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 86 ஆயிரத்து 132 பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர். இதன் மூலம் ஒரு கோடியே 98 லட்சத்திற்கு மேல் காய்கறிகள் விற்பனை ஆகி உள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.