உடுமலை அருகே லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரம் பகுதியை சார்ந்தவர் விவசாயி ஜெயராமன். இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இனைப்பு பெற வேண்டி விண்ணபித்துள்ளார். இந்நிலையில் விண்ணப்பத்தின் பேரில் விவசாயி ஜெயராமனை அழைத்த கொங்கல் நகர உதவி மின் பொறியாளர் சத்தியவாணி முத்து மின் மீட்டர் பொறுத்தி இணைப்பு தர ரூ. 2000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயராமன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 2000 பணத்தை உதவி மின் பொறியாளர் சத்தியவாணி முத்துவிடம் விவசாயி கொடுக்கும் போது காத்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாய் பிடித்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி