உடுமலையில் முறைகேடாக மது விற்பனை- வீடியோ வைரல்

திருப்பூர் உடுமலை நகராட்சி அனுஷம் நகர் பகுதியில், அரசு மதுபான கடைக்கு அருகில், அதிகாலை முதல் அனுமதி இன்றி செயல்படும் தனியார் மதுபானக்கூடத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் மதுவிலக்கு காவல்துறை மற்றும் உடுமலை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி