உடுமலை அருகே பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நேரம் பகுதியில் இன்று கள் விடுதலை கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பத்துக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சி மற்றும் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பனை ஓலையின் மூலம் தயாரிக்கப்பட்ட கம்மல், நெக்லஸ், நெற்றிச்சுட்டி உள்ளிட்ட பல்வேறு அணிகலன்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

தொடர்புடைய செய்தி