உடுமலை அருகே கால்வாயில் விழுந்த யானை பலி

திருப்பூர் உடுமலை அருகே திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படும் நிலையில், நேற்று மாலை சர்க்கார் பதி என்ற இடத்தில் தண்ணீர் அருந்த வந்த ஆண் யானை ஒன்று தவறி கால்வாயில் விழுந்து உயிரிழந்தது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், வனத்துறையினர் யானையை மீட்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி