திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்றது. 18 விவசாயிகள் 109 மூட்டை அளவுள்ள 5 ஆயிரத்து 450 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 7 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதன்படி முதல் தர கொப்பரை ரூ. 220 முதல் ரூ. 235.10 வரையிலும், 2-ம் தர கொப்பரை ரூ. 150.66 முதல் ரூ. 216.17 வரையிலும் ஏலம் போனது. இந்த தொகையானது விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.