உடுமலையில் கொப்பரை ஏலம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்றது. 18 விவசாயிகள் 109 மூட்டை அளவுள்ள 5 ஆயிரத்து 450 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 7 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதன்படி முதல் தர கொப்பரை ரூ. 220 முதல் ரூ. 235.10 வரையிலும், 2-ம் தர கொப்பரை ரூ. 150.66 முதல் ரூ. 216.17 வரையிலும் ஏலம் போனது. இந்த தொகையானது விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி