உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை இ-நாம் திட்டத்தின் கீழ் மறைமுக கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற ஏலத்திற்கு உடுமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 8 விவசாயிகள் 64 மூட்டை அளவுள்ள 3 ஆயிரத்து 200 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 7 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதன்படி முதல் தர கொப்பரை 167 முதல் 176.19 வரையிலும் 2-ம் தர கொப்பரை ரூ.136.69 முதல் ரூ.163 வரையில் ஏலம் போனது. இந்த தொகையானது விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.