அந்த வகையில் நேற்று மேம்பாலத்தில் எதிர் எதிராக வந்த காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அவரை வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில் விபத்தால் ரயில்வே மேம்பாலம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது