திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்க உள்ளது. இந்த நிலையில் பொழுதுபோக்கு அம்சங்கள் தொடர்பான ஏலம் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2-வது முறையாக நடைபெற்றது. ஏலத்தில் 2-நபர்கள் கலந்து கொண்ட நிலையில் ஏலத்தொகை 1 கோடி 9 லட்சத்து 12 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் குறைத்து வழங்க வேண்டும் என 2 பேரும் கேட்டதால் 2-வது முறையாக தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் கவுரி சங்கர் தெரிவித்தார்.