குடிமங்கலம் பகுதி விவசாயிகள் கவனத்திற்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயிகளின் நலனுக்காக, ஆதார் எண்ணைப் போன்ற தனித்துவ அடையாள எண்ணை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த எண்ணைப் பெற, தமிழ்நாடு அக்ரி ஸ்டாக் என்ற செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்யலாம். இதன் மூலம் விவசாயிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அரசு நலத்திட்டங்களை எளிதில் பெற வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி