திருப்பூர்: மன உளைச்சலால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் (20), மன உளைச்சலால் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்றவர், மறுநாள் காலை கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். திருப்பூர் வடக்கு போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி