திருப்பூர்: சிறுவனை தாக்கிய வாலிபர் கைது

திருப்பூர் முதலிபாளையத்தைச் சேர்ந்தவர் முகமது ஆசிக் (வயது 19). பனியன் நிறுவன தொழிலாளி.
இவரது நண்பரான 17 வயது சிறுவனிடம் இன்ஸ்டாகிராமில் தேவையில்லாத வீடியோக்களை பகிர்கிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து முகமது ஆசிக் சிறுவனை தாக்கியதோடு, கழுத் தில் அணிந்து இருந்த வெள்ளி சங்கிலி மற்றும் ரூ. 2 ஆயி ரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆசிக்கை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி