மேலும் மழைக்காலத்தில் மழைநீருடன் சாயக்கழிவு நீரை திறந்து விடுகின்றனர். திருப்பூர் சூசையாபுரம் பகுதியிலும் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு நேற்று கழிவுநீர் கால்வாயில் சாயக்கழிவு நீரை திறந்து விட்டுள்ளனர். இதனால் கழிவுநீர் கால்வாயில் மஞ்சள் நிறத்துடன் சாயக்கழிவு நீர் அதிக அளவில் சென்றது. சுத்திகரிப்பு செய்யாமல் இவ்வாறு தண்ணீரை திறந்து விடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீருடன் வெளியேற்றும் ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
'LIK' படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியீடு