மேலும் தனது செல்போனுக்கு டெம்பர்ட் கிளாஸ் ஒட்ட வேண்டும் என செல்போனை கொடுத்துள்ளார். அதனை எடுத்துச் சென்று டெம்பர்ட் கிளாஸ் ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது மகனுக்கு எடுத்துக்காட்டிய ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை எடுத்து அவரது பேக்கில் போட்டுக் கொண்டு டெம்பர்ட் கிளாஸ் மாற்றுவதற்கான பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து செல்போன் காணவில்லை என ஊழியர்கள் கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தபோது அந்த பெண் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. தற்போது அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.