திருப்பூர்: வீட்டில் விபச்சாரம்.. சிக்கிய பெண்

திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட புதுக்காடு பகுதியில் வீட்டில் வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருப்பூர் தெற்கு போலீசார், நிஷா (வயது 36) என்பவரை கைது செய்து ஒரு அழகியை மீட்டனர். மீட்கப்பட்ட அழகியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி