திருப்பூர்: மதுபோதையில் போலீஸ்காரர் பேசும் வீடியோ வைரல்

திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் காவலர் முத்துசாமி (வயது 41). இவர் மதுபோதையில் மது பாட்டில்கள், சிகரெட் பெட்டி, தண்ணீர் பாட்டில்கள் முன்னால் வைத்துக்கொண்டு பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நான் நேற்று பணியில் இருக்கும்போது ஒரு 100 கால் அட்டன் செய்தேன். அவர் மதுபோதையில் இருந்தார். அப்போது அந்த பிரச்சனையை சரிசெய்தேன். இப்போது என் மனைவியை காணவில்லை. அதனால் மது அருந்திக்கொண்டுள்ளேன். என் மகள் நன்றாக படித்துக்கொண்டு மெடல் வாங்கியுள்ளார். 

லீவு லெட்டர் கொடுத்தும் அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க. போலீஸ் ஸ்டேஷனில் போய் சொன்னேன். இன்ஸ்பெக்டர் அம்மா ஆப்சென்ட் போட்டுவிட்டார்கள். எதுக்கு ஆப்சென்ட் போட்டாங்கனு எனக்கு தெரியலை. ஐயா அவர் பார்க்கவா இல்ல எங்க ஏரியா கவுன்சிலர் பார்க்கவா என நீங்களே சொல்லுங்க ஐயா என மாநகர போலீஸ் கமிஷனருக்கு மதுபோதையில் வீடியோ மூலம் பேசியுள்ளார். மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு எனது மனைவி மகள்கள் கிடைத்துவிட்டார்கள் எனவும், எனது மனைவியை கோபத்தில் அடித்துவிடுவேன் என்பதற்காக என் அத்தை என் வீட்டில் உள்ளார்கள் என பேசி வெளியிட்டதும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி