திருப்பூர்: கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திருப்பூர் ரெயில் நிலையம் பகுதியில் நேற்று மாநகர மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த நசீர் (34) என்பதும், அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி