திருப்பூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; அமைச்சர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி, குண்டடம் ஊராட்சி ஒன்றியம், குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற கெத்தல்ரேவ் ஊராட்சிக்கான "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு அரசு சார்ந்த சான்றிதழ்களை மாண்புமிகு அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் அவர்கள் வழங்கினார். 

மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வட்டாட்சியர் திரு. திரவியம் அவர்கள், குண்டடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. சு. சந்திரசேகரன் அவர்கள், சடையபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. ஈஸ்வரன் அவர்கள், மருத்துவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி