திருப்பூர்: இஎஸ்ஐ புதிய திட்டம்; தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம்

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இஎஸ்ஐ திட்டம் குறித்த விளக்கம் மற்றும் அறிமுக விழா திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பிரீ 2025 திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஎஸ்ஐ கோவை மண்டல அலுவலர் கார்த்திகேயன் பேசுகையில் தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பிரீ 2025 என்ற புதிய திட்டத்தை திருப்பூர் தொழில் துறையினருக்கு அறிமுகம் செய்ய சைமா அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தகுதியான தொழிலதிபர்கள் தொழிலாளர்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்படுள்ளது. தாமதமான பதிவுகளுக்கு எந்த விதமான அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் இல்லை என்பது இதன் சிறப்பு அம்சமாக உள்ளது. இதனை பயன்படுத்தி தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து கொள்ளலாம் எனவும் இணையதளத்தின் மூலம் இந்த திட்டத்தை எளிதாக அணுகி சுய பதிவு செய்து கொள்ளலாம். கோவையில் உள்ள அனைத்து கிளை அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைத்துள்ளோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி