திருப்பூரில், சித்தி கண்டித்ததால் மனமுடைந்த 15 வயது சிறுவன் விவேக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். பீகாரைச் சேர்ந்த சீதாராம் என்பவரின் மகனான விவேக்குமார், கருவம்பாளையம் அடுத்த ஆலாங்காடு பகுதியில் வசித்து வந்தான். உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாத சிறுவனை சித்தி கண்டித்ததால் விரக்தியடைந்து இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.