இந்த நிலையில் தனி நபருக்கு சொந்தமான நிலத்திற்கு நொய்யல் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர 2 கிலோ மீட்டருக்கு குழாய் போடப்பட்டுள்ளது. எனவே தனிநபர் தண்ணீர் கொண்டு வர தடை விதிக்க வேண்டும். மனு கொடுத்ததின் பேரில் இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நொய்யலில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி கொடுத்தால் நீர்நிலைகள் அனைத்தும் பாதிப்படையும். ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வராமல் இரவு நேரங்களில் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர வாய்ப்புள்ளது.
எனவே அவ்வாறு தண்ணீர் கொண்டு வர தடை விதிப்பதுடன், தண்ணீர் கொண்டு வர போடப்பட்டுள்ள குடிநீர் குழாயையும் அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.