திருப்பூர்: பனியன் குடோனில் பிணமாக கிடந்த காவலாளி

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் அலிம் பாபு (வயது 67). இவர் அங்கேரிபாளையம் அருகே செயல்படாத பனியன் குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. அலிம் பாபுவுக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றுள்ளார்.

 இந்த நிலையில் பனியன் குடோனில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குடோன் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அலிம்பாபு இறந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார், அவரின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி