வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் ந. தினேஷ்குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர பொறுப்பாளர் ஈ. தங்கராஜ் வரவேற்றார். பகுதி செயலாளர்கள் ஜோதி, கொ. ராமதாஸ், மின்னல் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க. தலைமை பேச்சாளர்கள் சாவல்பூண்டி சுந்தரேசன், குடியாத்தம் அன்பு ஆகியோர் பேசினார்கள்.
சாவல்பூண்டி சுந்தரேசன் பேசுகையில், மும்மொழி கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. இந்தி மொழியை திணித்தால் பா.ஜனதா ஆட்சி அழிந்துபோகும். எந்த காலத்திலும் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடுவோம் என்றார்.