மாநில கராத்தே போட்டி: திருப்பூர் மாணவ-மாணவிகள் அசத்தல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் எம். கே. பி. கே. அமைப்பின் தலைமையில் மாநில அளவிலான கராத்தே போட்டிக்கான பிளாக் பெல்ட் திறனாய்வு தேர்வு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திலிருந்து 22 பேர் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு, சிறப்பான செயல்திறனுடன் தேர்வை முடித்தனர். அவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வை அமைப்பின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் சுரேஷ் செல்வம் நடத்தினார். முன்னதாக மாணவ- மாணவிகள் குன்னூர் எம். ஆர். சி. ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ராணுவ வீரர்களின் பயிற்சியை நேரில் கண்டதோடு, கராத்தே செயல்விளக்கத்தை சுரேஷ் தலைமையில் செய்து காட்டி ராணுவ உயரதிகாரிகளின் பாராட்டைப் பெற்றனர். 

ஏற்பாடுகளை திருப்பூர் பயிற்சியாளர்கள் செந்தில், ராஜேஷ்குமார் ஜோ, ஜெகதீஷ், சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி