திருப்பூர்: தாய்-தந்தையை தாக்கிய மகன் கைது

திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராயன். அவருடைய மனைவி மாராள் (60). இவர்களுக்கு கிருஷ்ணகுமார் என்ற மகனும், ஒரு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகுமார், ராயன் பெயரில் உள்ள இடத்தை கிரையம் செய்து கொடுக்குமாறு கூறி பெற்றோரிடம் தகராறு செய்துவந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் தகராறில் ஈடுபட்ட கிருஷ்ணகுமார், அவருடைய பெற்றோரைத் தாக்கினார். இதைத் தடுக்கச் சென்ற அக்கம்பக்கத்தினரையும் அவர் தகாத வார்த்தைகளால் பேசியதாகத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி