இந்நிலையில் நேற்று(செப்.4) மாலை கேஎஸ்சி பள்ளி மாணவனை 50க்கும் மேற்பட்ட சின்னசாமி பள்ளி மாணவர்கள் இணைந்து கட்டை, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து நிலையத்தின் நாளாபுறமும் இருந்து வந்த மாணவர்கள் கட்டை, பைப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு கத்தியபடியே மாணவனை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனால் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.