இந்த சாலையை சீரமைக்காததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பெரியதோட்டம் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சாதிக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலையில் சென்றால் விபத்தில் சிக்குவார்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் கட்டுகளுடன் உருவபொம்மையை பாடையில் ஏந்தி வந்தும் போராட்டம் நடத்தினார்கள்.
சாலையை சீரமைக்க தாமதப்படுத்தினால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.