ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் தினமும் தேசியக்கொடி பறக்கவிடப்படும். சூரிய உதயத்திற்குப் பிறகு கொடிகள் ஏற்றப்பட்டு சூரியன் மறையும் நேரத்தில் இறக்கப்பட வேண்டும் என்பது விதி. பகல், இரவு என 24 மணி நேரமும் தேசியக்கொடிகள் பறக்க தனியாக விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக, அத்தகைய கொடிகள் பறக்கக்கூடிய கம்பம் 100 அடி உயரம் இருக்க வேண்டும். இத்தகைய கொடிக்கம்பங்கள் சில கலெக்டர் அலுவலகங்கள், பெரும்பாலான ரயில்வே நிலையங்கள், மத்திய அரசின் பிரசித்திபெற்ற நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில்...