இந்த தொழிலாளர்கள் இயக்கும் விசைத்தறிகளின் எண்ணிக்கை 8-ல் இருந்து 16 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தொழிலாளியின் உடல் உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை. விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் 2022-ம் ஆண்டு ஏற்பட்டு 37 மாதங்கள் ஆகிறது. ஆனால் ஒப்பந்தப்படி கூலி வழங்கப்படவில்லை. அத்தியாவசியமான அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் குடும்பங்களின் கல்வி, மருத்துவம், உணவு பொருட்களுக்காக கூடுதலாக செலவாகிறது.
எனவே கலெக்டர் தலையிட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து பேசி கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது