வஞ்சிபாளையம் அருகே ரயில் மோதி முதியவர் பலி..

திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே உள்ள தண்டவாளத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நேற்று (டிசம்பர் 25) திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் கருப்பு, பச்சை கட்டம் போட்ட டீ-சர்ட் அணிந்திருந்தார். தொடர்ந்து ரயிலில் அடிபட்டு இறந்தவர் யார்? தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி