தொடர்ந்து பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கழிப்பறையை முன்புறமாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்தார்கள். தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட பெற்றோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தவர்களிடம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்கள். பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கூண்டுகட்டாக போலீசார் கைது செய்து வான் மூலம் ஏற்றினர். 30-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். கைது நடவடிக்கை அடுத்து கூட்டத்தில் இருந்த பெற்றோர்கள் அனைவரும் அகன்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு