திருப்பூர்: கள்ளக்காதலியின் மகளிடம் சில்மிஷம்; தொழிலாளி மீது போக்சோ வழக்கு

திருப்பூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). தொழிலாளி. இவருக்கு திருப்பூர் பாண்டியன் நகரில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த பெண்ணின் 16 வயது மகள் சகோதரனுடன் உடுமலை சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற நாகராஜ் அந்த சிறுமியை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

 இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு உத்தரவிட்டார். திருப்பூர் அனைத்து மகளிர் போலீசார் நாகராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றம் நிகழ்ந்தது உடுமலை என்பதால் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வழக்கை மாற்றம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி