கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகிகள், திருப்பூரில் அவினாசி ரோடு, பி.என். ரோடு சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது குறித்து மனு அளித்தும் அகற்றப்படாமல் உள்ளது. அதை அகற்ற வேண்டும் என்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு அதை ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு கொடிக்கம்பத்தை அகற்ற முனைப்பு காட்டுவதாக கூறினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கட்சி அலுவலகம் முன்புறம், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதை அகற்றுவது என்பது ஜனநாயக விரோதமானது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் என்றனர்.